வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஒரு பிரார்த்தனை

இறையின் பெயரால்..

பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களிலிருந்து பாதுகாவல் பெற
நாயகம்(ஸல்)கற்றுத்தந்த பிரார்த்தனை

நபி(ஸல்)அவர்கள்
'அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் பரஸி,
வல் ஜூனுனி வல் ஜூ;.தாமி வஸய்யி இல் அஸ்காமி'
என்று கூறுவார்கள்.

அறிவிப்பாளர் ; அனஸ் (ரழி)அவர்கள்
நூல் ; அபுதாவுத்

'யா அல்லாஹ் தொழு நோய், கருங்குஷ்டம், பைத்தியம் மற்றும்
கொடும் நோய்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்'.

புதன், 12 ஆகஸ்ட், 2009

தமிழர் திருமணமும் இனமானமும்

தமிழர் திருமணமும் இனமானமும்

இந்த நூலின் முதற்பதிப்பு 1993

இந்த நூலுக்கு முன்னுரை என்னும் தோரனவாயில் எழுதியிருப்பவர்
கலைஞர் மு.கருனாநிதி

இந்த நூலை எழுதிய ஆசிரியர்
பேராசிரியர் அன்பழகன்

தமிழர்கள் அனைவரும் அவசியம்
படிக்க வேன்டிய ஒரு புத்தகம்
இந்த நூலில் தமிழகத்தின் வரலாறும்
தமிழர்கள் குறித்தும் நிறைய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் தமிழினத்தைப்பற்றியும் பேராசிரியர் அதிகமாக எழுதி இருக்கிறார்.
அந்த நூலில் இருந்து உங்கள் ரசனைக்காக..




'முப்பதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
தங்களிடையே பேசும்மொழியாக வளர்த்து,
இருபதாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
நாட்டுப்பா செய்யும் நாவினராய் இலக்கியம் வடித்து,
பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
எழுத்து வடிவம் முறையும் கண்டு,
ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
இயல், இசை, நாடகம் என்னும்
முத்தமிழ் வகைகண்டு வளர்த்து,
மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
வரையப்பட்ட ஐந்திற இலக்கணமாம்
தொல்காப்பியத்தையும் பெற்று,
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்ன பிறந்த இணையற்ற வாழ்வியல் விளக்கும் அற நூலாம் திருக்குறளையும் கொண்டு,
அக்காலத்தை ஒட்டிப்பிறந்த
சங்கத்தமிழ்தொகை நூல்களாம்
எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கண்டு,
தொடர்ந்து செந்தமிழ் வளர்க்கும் முத்தமிழ் காப்பியமாம் சிலம்பினையும்,
புத்தம் பரப்பும் மணிமேகலையையும் பெற்று; அடுத்து திருமூலர் திருமந்திரத்தையும்,
மணிவாசகர் திருவாசகத்தையும்,
மூவர் தேவாரத்தையும் ஆழ்வார்கள் பாசுரத்தையும்,
திருத்தக்க தேவரையும், கம்பரையும், சேக்கிழாரையும்,கச்சியப்பரையும்,
செயங்கொண்டாரையும், வில்லிப்புத்தூராரையும்,
அருணகிரியாரையும், தாயுமானவரையும்,
வடலூர் வள்ளலாரையும்,
பாரதியாரையும், பாரதிதாசனாரையும்
காலத்தின் கருவூலங்களாகப்பெற்றுள்ள
பெருமைக்குரிய தமிழ் இனத்தாரின் வாழ்வில் தான் திருமணங்கூட தமிழில் நடைபெறவில்லை..?!

இன்னும் பல ஆழமான கருத்துக்கள் சிந்தனைகள்
இந்த நூலை பூம்புகார் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர்.