வியாழன், 19 பிப்ரவரி, 2009

என்னத்தே... கோஷ்டிகள்!

இன்றைய அவசர உலகில் எத்தனை எத்தனையோ மாற்றங்களால்,
நிதானமாக வாழ்ந்த மனிதன் சற்றே தடுமாறி தான் இருக்கின்றான் என்றால் மிகையல்ல... இயந்திரமயமான வாழ்க்கை, பிரிவுகள், பொருளாதார சிந்தனைகள், வேலைப்பளுவுகள்,இதனால் ஏற்பட்ட மன அழுத்தங்கள்
என இப்படியே அடுக்கலாம்..இதனால் என்ன மாறுதல்கள்
நம்மைப்போன்ற சமுதாயத்தில் ஒரு பின்னடைவு ..
என்னத்தே படிச்சி.. என்னத்தே..பார்த்து.. என..
அன்றாடம் வாழ்வில் பார்த்து வருகிறோம்.



நண்பர் ஒருவர் மலைவாழிடம் ஒன்றுக்கு விடுமுறையை கழிக்க சென்று
இரன்டே நாளில் திரும்பிவந்து விட்டார்.. என்ன என நாம் கேட்க,
அவர் சொன்ன பதில் ..ஆமா, நாம் பல தடவை பார்த்த இடம் தானே..
பாருங்கள் விடுமுறையை கழிக்க சென்றவரின் மன நிலையை..
அதே போல நமது நண்பர்கள் பலரும் இளனிலை அல்லது முதுனிலை படிப்பதற்காக
திறந்த வெளிபல்கலைகளில் சேர்ந்துள்ளனர்.. ஆனால், எப்போ முடிப்பார்கள் என அவர்களுக்கும் தெரியாது..அந்த பல்கலைக்கும் தெரியாது.
கேட்டால்...என்னத்தே..??!! தான்.. இப்படி பல சம்பவங்களை உதாரனமாக சொல்லலாம். ஆனால், இதே மாற்றம் நமது பெண்கள் சமுதாயத்தில் இல்லை.
அவர்கள் இந்த பிரபஞ்சம் முழுவதும் உற்சாகமாக உலா வர துணிந்து விட்டார்கள்..



ஓருமுறை இனையத்தில் உறவாடிக்கொண்டிருக்கிற போது
அது ஒரு புத்தான்டின் தொடக்கம் வரும் நேரத்தில்..
உனது எதிர்கால எண்ணம் என்ன என,
தோழியிடம் வினவியபோது அவள் சொன்ன பதில்,
நான் கல்பன சாவ்லா போல உயர பறக்க வேனும் என...??!!!
அதே போல ஆசியாநெட் என்ற இந்திய தொலைக்காட்சியின் G.M. Middle east ஆக, பணிபுரிபவர் பிந்துமேனன் என்ற பெண் தான். எனக்கு ஒரு முறை
ஒரு தோழி குறுச்செய்தியாக அனுப்பிய வாழ்த்து செய்தி ...



'challenges are high,
dreams are new
world out there is waiting for u
dare to dream dare to try
no goal is distant
no star is too high..'
பாலகுமாரன் கதைகளில் தான் (சியாமளி, சுபத்ரா, காயத்ரி என)
இது போல துணிச்சலான பெண்களை பார்த்து இருக்கிறோம்.
ஆனால், நிஜ வாழ்வில் இப்போ பார்த்து வருகிறோம்.
இன்னும் சென்னை போன்ற நகரங்களில் பல உயர்மட்டங்களில் நமது பெண்கள்
பதவி வகிக்கிறார்கள் என்றால் மிகையல்ல. ஆனால், காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் இப்பொது சலிப்படைந்த நமது ஆண் வர்க்கம்
சற்றே தனது நட்பு வட்டத்தையும், வாழ்க்கை நடைமுறையையும்,
ஆன்மிகமும் கலந்து நல்ல மனவளத்துடன் உலகை உற்சாகமாக வெற்றிக்கொள்ளும்
நாட்கள் மிகதூரத்தில் இல்லை என்பது நிதர்சனம்.

நமது காதுகளில் பாரதியின் கவிதைகள் ரீங்காரமிட..

'மனதில் உறுதி வேன்டும்
வாக்கினிலே இனிமை வேன்டும்
நினைவு நல்லது வேன்டும்
நெருங்கின பொருள் கை படவேன்டும்..'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக