வியாழன், 5 பிப்ரவரி, 2009

ஆர் எஸ் பதி மருந்து

அன்றைய காலங்களில்
நமது வீடுகளில் இருந்த ஒரு சிறந்த நாட்டு மருந்து
அதான் ஆர் எஸ் பதி மருந்து.
எங்கள் வீடுகளில் எங்கள் பாட்டனார்
அந்த பதி மருந்தை எடுத்து வா என கேட்க,
நாங்கள் எடுத்து போய் கொடுத்து இருக்கிறோம்.
இப்போ தானே எதற்கெடுத்தாலும் வைத்தியசாலைக்கும்,
ஆங்கில மருந்துகளிலும், வாழ்க்கையை வீனாக்குகிறோம்.



அன்றைய காலங்களில் வீட்டுக்கு வீடு
நாட்டு மருந்துகள்தான். நாட்டு வைத்தியம் தான்.
ஆர் எஸ் பதியும் அன்று முதல் இன்று வரை
பல இல்லங்களில் கோலோச்சி வருகிறது.
இது 98 வருடங்களுக்கு மேலாக
பாரம்பர்யமிக்க குடும்ப மருந்து. அதுவும் இது

இந்த நோய்க்கு தான் என்று இல்லை,
'நானா கடை சால்னா' மாதிரி எல்லாத்துக்கும்.
அது தலைவலியா இருக்கட்டும்,
இல்லை ஜலதோஷமாகட்டும்,
வெட்டுகாயமாகட்டும்.. இது போன்ற
குளிர்காலங்களில் கொஞ்சம் நீலகிரி தைலவாடை உள்ள
பதி மருந்தை தடவிக்கொண்டு இழுத்து போர்த்தினால்..
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக