வியாழன், 23 செப்டம்பர், 2010

முகமது ரபியின் ....

அன்றைய காலங்களில் வெளி நாட்டு பயணங்கள் என்பது
மிகவும் சிரமமான வேலை.. சிலரால் நினைத்துக்கூட பார்க்கமுடியாது.
அந்த மாதிரி காலங்களில் பயணம் செல்வது என்றால் பம்பாய் செல்லனும்
அங்கே யாராவது ஒரு ஏஜென்டிடம் பணம் கட்டி, பயணத்திற்காக காத்து இருக்கனும்.
அது சில வாரங்களும் ஆகும், சில மாதங்களும் ஆகும்,
இன்னும் சொல்லப்போனால் சிலருக்கு வருடங்கள் கூட ஆகி இருக்கிறது.
இப்போது உள்ளது போல அத்தனை சுலபம் அல்ல..

அது போல பம்பாய் சென்ற நமது மக்கள், முகமதுஅலி சாலையிலும்,
செம்பூரிலும், சீத்தாகேம்பிலும், முசாபர்கானாவிலும் வாழ்ந்தார்கள்,
அது போல மொழி தெரியாத ஒரு மானிலத்தில், ஒரு நகரத்தில் இருந்த இவர்களுக்கு
மிகவும் பரிச்சயமான ஒரு குரல் இன்றுவரை என சொல்லப்போனால் அது முகமதுரபியின் குரல்தான்..

சமீபத்தில் முகமது ரபியின் மறைந்த தினம் சென்றபோது
காலம் சென்ற ரபியின் ஞாபகம் வருகிறது.
அந்த முகம், வழுக்கை தலை, உதட்டில் இருக்கும் சிரிப்பு..
இப்போது உள்ளவர்களுக்கு அவரை தெரிய வாய்ப்புகள் கம்மி.
ஆனால், அன்றைய காலங்களில் அவரது வாய்ஸ்க்கு நல்ல மவுசு இருந்தது..

அன்றைய புராதான மும்பையில் பழைய கட்டிடங்களில் நடுவே,
நெரிசலான சாலைகளில், குறுகலான சந்துகளில் நாம் உலாவரும்போது
எங்கேயோ இருந்து ஒலிக்கும் அந்த ஹிந்துஸ்தானி ஹிந்தி பாடல்கள் வாவ்வ்..

எப்படி மலபார் முஸ்லிம்களுக்கும் பழைய ஹிந்தி பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதோ,
அதுபோல நமது மக்களுக்கும் பழைய பாடல்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
அதனால் தான் நமது மக்கள் பலர் இன்னும் ரபியின் பாடல்களை ரசித்துக்கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
இதை படிக்கும் நமது மக்களுக்கு அன்றைய நாட்களின் எண்ணங்களை
அசைபோட வைக்கும் என்பதில் ஐயமில்லை. அதுபோல பழைய
பின்டிபஜாரை ஞாபக படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை.

அன்றைய காலத்தில் நமது இந்திய நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒருவர்
பெயர் ஞாபகம் இல்லை... அவர் காஷ்மீர் சென்ற போது
பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்கிறார்..
நீங்கள் முகமதுரபியை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என..
அதற்கு அவர் சொன்னார் 'இந்தியாவுக்கும்- பாகிஸ்தானுக்கு யுத்தம் தொடங்கும் நேரத்தில்,
முகமதுரபியின் பாடலை ஒலிபரப்பினால், உடனே இரு நாட்டினரும் சொல்வார்களாம்,
இந்த பாடல் முடிந்த பின்பு யுத்தம் தொடங்கலாம் என...))))'
எவ்வளவு பெரிய செய்தி.. இன்றும் பலர் முகமதுரபியின் பாடல்கள் என்றால் போதும்..
பலர் எப்போதும் காரில் ஒலிக்க கேட்டுச் சொல்வார்கள்...
அவரது பல பாடல்கள் புகழ்பெற்ற பாடல்கள்..
'aanese uske....'