ஞாயிறு, 11 ஜனவரி, 2009

அவஸ்தைகள் பலவிதம்-1

ஒரு முறை காரில் என்.எஸ்.கலைவானர் செல்ல
அவருக்கு அருகே காரில் ஒருவரும் பயனிக்க..
என்.எஸ். அவருடன் பேசிக்கொண்டு வரும்போது,
அந்த பேச்சில் என்.எஸ். சொன்னாராம்.. அருகே இருந்தவரிடம்,
தம்பி நீங்கள் எல்லாம் கலைத்துறைக்கு வாங்க.. இப்போ காலம் ரொம்ப கெட்டுப்போச்சி.. என்ன என்னவோ எல்லாம் பாட்டிலே எழுதுறாங்க?? என சொல்லி..
இப்போ ஒரு பாட்டு வந்துருக்கு, அது ரொம்ப ஆபாசமா இருக்கு என சொல்லி,
அந்த பாட்டையும் சொன்னாராம்.. என்ன பாட்டு தெரியுமா?
'அத்தைமடி மெத்தையடி....ஆடி விளையாடம்மா?'
அடப்பாவமே இதையா சொன்னார் என ஆச்சர்யமா? அது அந்த மாதிரி காலம்.
தலைவனும் தலைவியும், அன்பே .. நாதா.. என கொஞ்சிய காலம்.

இன்று நமது தமிழ் பாடல்களை கேட்டு பாருங்க?
படுக்கையறையில் உள்ள முக்கல் முனகல் வரை பாடல்களாக பதிவாகிறது.
இதை நாம் சினிமாக்களில் பார்க்காமல் இருந்தாலும்,
நாம் வெளியே பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது
இது போன்ற ஆபாச சங்கடங்களுக்கு ஆளாக நேர்கிறது.
இந்த கட்டுரையில் பல பாடல்களை உதாரனமாக சொல்லலாம்.
ஆனால், பல பெரியவர்களும் இங்கே வந்து படிப்பதால்,
அதன் கண்ணியத்தை கருதி நான் எழுதவில்லை.

நாம் நமது வீடுகளில், சில சமயங்கள் இது போன்ற சங்கடங்களில் ஆளாகிறோம்.
அதே போல பொது இடங்களில் உதாரனமாக, பேருந்து நிலையங்களில்??
ஏன் பேருந்துக்குள்ளே.. அதுவும் ஒலியும்..ஒளியுமாய்....)))))))) அது போல திருவிழாக்களில், ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போதும்,
பலரும் இது போன்ற சங்கடங்களில் ஆளாகின்றோம். பலரும் நினைக்கலாம்.
அதற்காக பக்திப்பாடல்களாக எழுதனும் என? அப்படியில்லை.
நான் சொல்ல வருவது காதல் காட்சிகளாக இருந்தாக்கூட,
பாடல் வரிகளில் காதல் மூடி மறைப்பது போல இருந்தால் சரி?

கண்ணதாசன் எழுதாத ஆபாசமா? இன்று வரை ரசித்து கேட்கிறோமே?
ஏன் இன்னும் சொல்லவேன்டுமானால், 'கண்ணன் ஒரு கை குழந்தை ..' என்ற பாடலை பல இல்லங்களில் விடியல் பொழுதுகளில் ஒலிக்க கேட்டு இருக்கிறோம்.
இது என்ன பக்திப்பாடலா? காதல் பாடல் தானங்க..?!!
இது போல அன்றைய கால பாடல்களை பல பாடல்களை உதாரனமாக சொல்லலாம்.
தமிழ் சினிமாவில் முதன் முதலாக வெளிப்படையாக ஆபாசத்தை தந்த பாடல், 'பூஜைக்கேத்த பூவிது..' இதில் தொடங்கியது
இன்று டோலு..டோலு.தான்.. என வந்து
ஆபாசம் கலந்து ஒலித்துக்கொண்டு தான் இருக்கு.

இதனால் என்ன என தானே கேட்கிறீங்க?
இது போன்ற கலாச்சார சீரழிவால் வளர்ந்து வரும் தலைமுறைக்கு
அவர்களின் பண்பாட்டை, கண்ணியத்தை பாதிக்கும்.
நண் மக்கள் தானே ..
நல்ல தலைமுறைகள் தானே..
நல்ல சந்ததிகள் தானே..
மண்ணுக்கு பெருமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக