ஞாயிறு, 11 ஜனவரி, 2009

லைவ் இன் ரிலேசன்ஷிப் தெரியுமா?

லைவ் இன் ரிலேசன்ஷிப் தெரியுமா?
இது என்னடாவென்றால் இது ஒரு புது மாதிரியான வாழ்க்கை முறை.
இதிலே பெண்பார்க்கும் படலம் இல்லை.
மாமியார்... நாத்ஸ்...தொல்லைகள் இல்லை.
அம்மி மிதிக்கவேன்டியதில்லை.
அருந்தது நட்சத்திரம் பார்க்கவேன்டியதில்லை.
செவ்வாய்..புதன்..தோஷங்கள் இல்லை.
அய்யர்கள் வேதமந்திரங்கள் ஓதவேன்டியதில்லை.
உன்னை எனக்கு பிடிச்சிருக்கு, உனக்கும் என்னை பிடிச்சிருக்கா?!!
வா வாழலாம். ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேன்டியது.
இவர்கள் நண்பர்களை அழைத்து பால்காய்ச்ச..
இவர்கள் வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டனர். அட தேவுடா....

இந்த வாழ்க்கை எங்கேயோ இல்லை.
டெல்லி, மும்பையில் தொடங்கி
இப்போ நம்ம சிங்கார சென்னையிலும்.
எப்போ வேன்டுமானாலும் பிரிந்துக்கொள்ளலாம்..
எந்த பதிவிலும் இவர்கள் பதிந்து கொள்வதில்லை.
தகவல் தொழில் நுட்பம் வந்துச்சி சார். வேலை தேடி போனாங்க..
வேலை வேற, தங்கனுமே.. தங்க வீடு வேனும். அங்க நமக்கு தகுந்த மாதிரி..
ஒரு ப்ரன்ட் வேனும்.. அது கேர்ள் ப்ரன்டா இருந்தா நல்லா இருக்கும்.
சமைக்க..லூட்டி அடிக்க.. வாழ்க்கை தித்திப்பா இருக்க..


இருவருக்கும் கை நிறைய சம்பளம்,
பெரிய நகரங்களில் மன அழுத்தம் நிறைந்த வேலை..
இதுக்கெல்லாம் ஒரு ரிலாக்ஸ் தான். Live in relationship.

இதுக்கு சமீபத்தில் மகாராஷ்ரா அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது.
இவர்கள் சில வருசங்கள் சேர்ந்து வாழ்ந்தால் இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என அறிவித்துள்ளது.என்ன இது புதுசு என நினைக்கிறீங்களா?



இருபது வருடங்களுக்கு முன்னரே இது போல ஒரு வாழ்க்கை நடைமுறை சென்னையில் வாழ்வது போல நான் ஒரு கதையில் படித்து இருக்கிறேன். புத்தகப்பெயர் 'ஆசை எனும் வேதம்'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக