வெள்ளி, 11 செப்டம்பர், 2009

உள்ளங்கையில் உலகம்

சமீபத்தில் புத்தகம் ஒன்று எங்கள் ஊர் நூல் நிலையத்தில் கிடைத்தது.
சரி வேற ஒன்றும் கிடைக்கவில்லை. இதை ஒரு புரட்டு புரட்டலாம் என
புரட்டினேன். அடட... என்ன ஒரு அழகான ஒரு புத்தகம்
என்ன ஒரு அழகான மொழிபெயர்ப்பு.
ஆமாங்க இது வேற்று மொழியில் இருந்து
தமிழுக்கு வந்த நூல். இந்த நூலை எழுதியவர்
தனது வாழ்வில் நடந்த அனுபவங்கள்
பிரயாணத்தில் சந்தித்த அனுபவங்கள்
தனது வாழ்வில் சந்தித்த பெரிய மனிதர்கள்
தான் முதன் முதலாக வேலைப் பார்த்த டாடா குழுமம்
இன்னும் கர்னாடகாவின் வாழ்க்கைகள் , கிராமங்கள் என
அனைத்தையும் மிக அழகாக தொகுத்திருக்கிறார்.
வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!



இந்த நூலை எழுதியவர் சாதாரனமானவங்க இல்லை.
இன்பாசிஸ் பவுன்டேஷன் என்னும் அமைப்பை நடத்தி
இந்தியாவின் கிராம்ப்புறங்களில்
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பள்ளிகளை திறந்துள்ளார்.
அட என இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படி?
இவங்க வேற யாரும் இல்லை,
இன்பாசிஸ் நாராயனமூர்த்தியின் மனைவி தான்
இவங்க பெயர் சுதாமூர்த்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக