வியாழன், 12 பிப்ரவரி, 2009

காதலர் தினம்

புன்னை மரச்சோலையிலே
பொன்னளிரும் மாலையிலே
என்னைவரச் சொல்லி
அவர் கன்னல்மொழி பகிர்ந்ததெல்லாம்
நினைவுதானொடி..சகியெ
கனவு தானோடி....



இன்று காதலர் தினம் மேலை நாட்டு கலாச்சாரத்தால்
உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.. நாம் எழுத,
டைடானிக் முதல் உலக புகழ்பெற்ற ரோமியோ காதல் வரை எழுதலாம்.
நமது பார்வையில் தமிழத்தை மட்டும் பார்த்தமானால்,
நமது கலாச்சாரத்திற்கு இந்த காதலர் தினமும்,
இதன் கொண்டாட்டங்களும் பல பெற்றோர்களுக்கு பயத்தை கொடுக்கும்
என்பதில் ஐயமில்லை. காரனம் நமது கலாச்சாரத்திற்கு
இது ஒவ்வாத ஒன்று என சொல்லலாம். இருந்தாலும்,
நமது பக்கமும் நிறைய காதல் கதைகள் இருக்கு.
முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கவில்லை..
இதில் அழகி போல மறைத்த காதலும் இருக்கு.
ஆட்டோகிராப் போல அந்த காதலை மறந்து தனது வாழ்வை
இனிதே கொன்டு செல்பவர்களும் உண்டு.



காதலியை மையமாக வைத்து உலா வந்த பாடல்கள் தமிழகத்தில் ஏராளம் ..ஏராளம்..
'மண்ணில் இந்த காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..'
தமிழ் கவிஞர்கள் எழுதாமல் இல்லை.. அதே போல,
1952 வாக்கில் தமிழ் மக்கள் மிகவும் ரசித்த பாடல் அசோக்குமார்
திரைப்படத்தில் ஒலித்த 'உன்னைக்கன்டு மயங்காத பேர்கள் உண்டோ..'
அதேபோல தில்லானா மோகனம்பாள் படத்தில் சிக்கல் சன்முகசுந்தரத்துக்கும்..
அந்த மோகனாங்கிக்கும் உள்ள காதல் தமிழக மக்களிடம் மிகவும் பிரசித்திபெற்றது.
இந்த காதலை ரசிக்காத தமிழக மக்களே இல்லை எனலாம்.
என்ன தான் பலவகை காதல் இருந்தாலும் தமிழ் நாட்டு தமிழக மக்களிடையே மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் ரசித்த காதல்
அது வந்தியதேவனும் -குந்தவை நாச்சியாருக்கும் உள்ள காதலேயாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக