புதன், 27 ஜனவரி, 2010

61வது குடியரசு தினம்

நாட்டின் அதாங்க
நம்ம தாய் திரு நாட்டின்
61வது குடியரசு தினம் கொண்டாடினோம்.
குண்டு துளைக்காத மேடையில் முக்கிய தலைவர்கள் இருந்தனர்.
அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்பதால்,
சரி அது போகட்டும்..

இந்த 61வது குடியரசு தினம் முதல்
மக்கள் தங்கள் அலுவல்களை சுலபமாக வழி வகுக்கப்படுமா?
என்பது உங்கள் சிந்தனைக்கு தர விரும்புகிறேன்.
உதாரனமாக..
வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இல்லை.
சரி அதற்காக தனியாக ஒரு ஆள் வருவார் என்றார்கள்.
அவரும் வந்தார்.. கேட்டதற்கு அது வி.ஒ. அலுவலகத்தில் தான் செய்யவேண்டும்
என சொல்லிவிட்டு அவர் போய்ட்டார்,
சரி என அங்கே கேட்டதற்கு இங்கே இல்லை அவரிடம் தான்
கேட்க வேண்டும் என அவர்கள் சொல்ல..
நண்பர் ஒருவரை சந்திக்கும்போது
பேரூராட்சியில் இதற்கு என
விண்ணப்பம் இருக்கு அதை எழுதி கொடுத்தால் போதும்
என சொல்ல அங்கே விரைந்தால்...
(மூச்சி வாங்குதடி முத்துப்பேச்சி...)

அவர்கள் கூலாக...
நாங்கள் இருப்பதை மட்டும் சரிபார்ப்போம்
நீங்கள் புதியதாக பதியவேண்டும் என்றால்
தாலுகா ஆபிஸ் தான் போகனும் என சொல்ல..
இப்படி ஓரளவு விபரம் தெரிந்தவர்களையே அலைக்கழிக்க
ஒன்றும் அறியாத பாமர மக்களை
இந்த அரசு அதிகாரிகள் என்ன பாடுபடுத்துவார்கள்.
அட தேவுடா...

மக்களை மடையர்களாக்க...
இலவச திட்டங்கள்..
வாக்கு வாங்க பணம்..
யாரு இதை பத்தி எல்லாம் கவலை படப்போறா?


சரி இதற்கு தான் இப்படி என்றால்
கடவுச்சீட்டு அலுவலகம் போய்
அது சரி இல்லை
இது சரி இல்லை என திரும்பும் மக்கள்
அதே மாதிரி
பிறப்பு இறப்பு சான்றிதழ்
ஒரு அம்மணிக்கு மாற்று சான்றிதழ் (transfer certificate) வேண்டுமாம்.
எந்த வருசம் முடித்தது என ஞாபகம் இல்லை
காமாட்சி அம்மா டீச்சர் என பெயர் மட்டும் ஞாபகம்
என்னமோ போங்க ஒவ்வொரு வேலைக்கு இது போன்ற
ஏராளனமான லொள்ளுகள்...
ஆனால் கேட்கும் போது அழகாக பதில் சொல்வார்கள்
குடும்ப அட்டை நகல் இருந்தால் போதும் என..
அதை கொண்டு போய் காண்பித்தால்
இதிலே உங்க போட்டோ இல்லையே?
அட புண்ணாக்கு
இதில் என்ன குரூப் போட்டோவா ஒட்ட முடியும்?!
யாராவது ஒரு போட்டோ தானே தர முடியும்?
சரி இது போகுது நம்ம தொலை தொடர்பு இருக்கே?
அங்கே இதை விட நகைச்சுவைகள் கூடுதல்?
கஸ்டமர் சர்வீஸ் என்றால் என்ன என தெரியாத மக்கள்?
என்னமோ போங்க...

61 வது குடியரசு தினம் நகர்கிறது.
இந்தியா ஒளிர்கிறது
கொஞ்சம் நிதானமான நாடு
நாம தான் பொறுமையா இருக்கனும்.
சாரே ஜ்ஹான்சே அச்சா..................

செவ்வாய், 19 ஜனவரி, 2010

அட்டிங்கல்




சேர நாட்டில் பயணம் செய்தபோது
அது ஒரு மாலை நேரம்
அதுவும் பொன் மாலை நேரம்
சாலை வழியே திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பே
அட்டிங்கல் என்ற ஒரு ஊர் உள்ளது.
சரி ஊரைப் பார்க்கலாம் என ஒரு உலா
சின்ன ஊர் தான்.. நமது வழக்கில் சொன்னால் பேரூராட்சி.
அங்கே பேருந்து நிலையம் அருகே ஜும்மா பள்ளி
பின்னர் அப்படியே இரவு உணவு சாப்பிட
கேரளத்தில் மிகவும் சுவையான சிக்கன் வகைகள்





இரவு உணவுக்கு நாங்கள் சொன்னது
புரோட்டா, நெய் பத்தரை (கேரள உணவு)
மலபார் சிக்கன், சிக்கன் 65, ஹாங்காக் சிக்கன்,
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சொல்லும் போதே நாக்கு சப்பு கொட்டுது..


அத்துடன் நண்பருக்காக ஒரு பழச்சாறு ஒன்று.
இரவு நேரத்தில் பழச்சாறு அதிக குளிர் என்பதால்
நான் கொஞ்சம் தான் சுவைத்தேன்..
ஆனால், சுவையோ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சனி, 16 ஜனவரி, 2010

பொங்கி வரும் காவிரி



கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா
இருக்கட்டுமே என தான்
இதை போட்டேன்.
ஏய் மாப்ளே என்ன இப்படி பாக்குறே,
நல்லா இருக்கா?

வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பான அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஒரு வருடம் ஆகிவிட்டது.
என்னமோ இப்போ வந்து வலைப்பதிவு எழுத வந்தமாதிரி இருக்கு.
ஒரு வருடம் போனது தெரியலை..

இனையங்களுக்காக கட்டுரைகள் எழுதுவது வழக்கம்.
அதுபோல நான் எழுதிய கட்டுரை ஒன்றை
எனது நண்பர் சேர நாட்டில் வாழும் 'வசந்த்'
அவர்களுக்கு அனுப்ப அவர் படித்து விட்டு,
இதை நீங்கள் வலைப்பதிவில் எழுதினால்
அனைவரும் படித்து பயன் பெறுவார்களே எனக்கூற..
சரி முயற்சி பண்ணலாம் என
தொடங்கப்பட்டது தான் இந்த வலைப்பதிவு.
'எனது வாழ்க்கைப் பயணங்களில்'
சோழ தேசத்தின் மண்வாசனையுடன், பண்பாட்டுடன்,
இந்த வலைப்பதிவில் எழுதி வருகிறேன்.

எனது நட்பு வட்டங்கள் மட்டுமல்லாது
எனது முகம் தெரியாத எத்தனையோ பேர்
எடுத்து படித்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதுவரை 40 நாடுகளில் இருந்து வந்து இருக்கிறீர்கள்.
சரி ஒரு வருடம் ஆகிவிட்டது.
வலைப்பதிவை அழகு படுத்துவோம் என அழகுபடுத்தி
இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்.
இனி வரும் காலங்கள்
இனிதே செல்ல
எல்லாம் வல்ல இறைவனிடம்
பிரார்த்தித்த வண்ணம்
நமது எழுத்து பயணத்தை தொடருவோம்.
என்றும் அன்புடன்