திங்கள், 16 பிப்ரவரி, 2009

தமிழனின் அடையாளம்

செந்நெல் மாற்றிய சோறும்,
அநெய் தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை,
கட்டித் தயிரோடு மிளகின் சாறும்,
கானில் நன்மதுரம் செய் கிழங்கும்,
நாவில் இனித்திடும் அப்பமும்
நம் எல்லாரையும் நலமுடன் வளர்ப்பன..'


அன்றைய காலங்கள் முதல்
இன்றைய காலங்கள் வரை
தமிழர்கள் உலகம் முழுவதும்
புலம் பெயர்ந்து வாழ்வதும்,
திரைகடலோடி திரவியம் தேடுவதும் புதிதல்ல..
ஆனால், தமிழர்கள் எங்கே வாழ்ந்தாலும்,
அவர்களுக்கு உரிய அடையாளத்தை இழப்பதில்லை..


அந்த வகையில் தமிழர்கள் என்ன தான்
மிகப்பெரிய நகரங்களில் வசித்தாலும்
மிகப்பெரிய அலுவலகங்களில்
உயர்பதவிகளில் வகித்தால் கூட,,
உணவு விசயத்தில் தமிழக உணவை ரசித்து புசிப்பது
இவர்களுக்கு அலாதி ப்ரியம் என்றால் மிகையல்ல.


அது தோசையாக இருக்கட்டும்
இல்லை இட்லியாக இருக்கட்டும்.
இல்லை நல்ல சோறும் அதனுடன் சாம்பாரும்
தொட்டுக்க கூட்டுகறிகளும்
அப்பளம், ரசம், ஊறுகாய் என...

அதுவும் மீன்குழம்பு என்றால்,
இல்லை குறும்ப்பாட்டு கறிகுழம்பு,
நாட்டுக்கோழி பிரியானி...
செட்டி நாட்டு சிக்கன் வறுவல்
இடியாப்பமும் கோழிகறியும்
தலைப்பாகட்டு பிரியானி
கொக்கா மக்க....)))))))

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக