திங்கள், 19 ஜூலை, 2010

அவஸ்தைகள் பலவிதம்

'விவேக் ஒரு படத்தில் சொல்வது போல
ஏய் சர்தார்ஜி ஆளில்லா டீக்கடையிலே
யாருக்கடா டீ ஆத்துறே?!
உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
--------------)))))))ha..a..a'


சமீபத்தில் எனது நண்பர் ஒருவருடன்
அலைபேசியில் உரையாடும்போது ஒரு சேதி சொன்னார்.
நீங்கள் எனது அருகாமையில் இருந்து இருந்தால்,
அந்த தகவல் எனக்கு கிடைத்து இருக்கும்,
நீங்கள் இல்லாததால்
எனக்கு சேதி கிடைக்கவில்லை..
அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன் என்றார்.
என்ன வென்றால், எனது நண்பருக்கு மிகவும் முக்கியமான சேதி ஒன்று தெரிந்தது.
ஆனால் அது காலதாமதமாக பதினைந்து தினங்கள் கழித்து தான் தெரிந்தது...
காரனம், அந்த நண்பருக்கு அருகாமையில்
நான் வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்போது
எந்த தகவலாக இருந்தாலும் உடனே தெரிவித்து விடுவேன்.. அது இரவு நேரங்களாக இருந்தாலும்,

இதைப்போல நமது உலகில் ஏராளனமான நண்பர்கள்
அவர்களுக்கு பிடித்தமான வேலைகளை செய்து கொண்டு இருப்பார்கள்,
அவர்கள் நம்மிடம் இருந்து எதையும்
எதிர்பார்க்க மாட்டார்கள்.

உதாரனமாக பத்திரிகை துறையில் பாருங்கள்..
வாரா வாரம், வார இதழ்களை படித்து விட்டு
உடனே அதற்கு
ஏதாவது கருத்துக்கள் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி விடுவார்கள்.
அதே போல இன்னும் சில நேயர்கள்
வானொலி கேட்டு
அதற்கு கடிதம் எழுதுவார்கள்..
இன்னும் சிலர் தாம் படிக்கும் பத்திரிகைக்காக
ஒரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்தி
அவர்களுடன் உறவுகள் ஏற்படுத்தி
அதில் தமது பணிகளை செய்வார்கள்..
இன்னும் சிலர் தமது நட்பு வட்டத்தை விடாமல்
அடிக்கடி தொலைபேசி அல்லது அலைபேசியில் உறவாடுவார்கள்..

ஆனால், நம்மில் பலர் எதுவுமே செய்யமாட்டார்கள்
ஆனால் அது போன்று செய்பவர்களை கிண்டல் செய்வோம்.. கேலி செய்வோம்.
இவர்களுக்கு வேற வேலை இல்லை.. என...

ஆனால் அவர்கள் அருகாமையில் இல்லாதபோது
அவர்கள் தனது வேலைகளை நிறுத்தும்போது
அவர்களின் அருமை நமக்கு தெரிகிறது..
எனது நண்பர் அலைபேசியில் என்னிடம் ஆதங்கப்பட்டதும் அதான்..
ஆனால் நம்மில் பலரோ அது போன்ற வேலைகளை செய்வதும் இல்லை,
செய்பவர்களை பாராட்டுவதும் இல்லை,
ஆனால், கிண்டல் மட்டும்
ஏராளமாக ,,, தாராளமாக,,

நம்ம வடிவேலு பானியிலே
சொல்லவேண்டும் என்றால்
ஏன்.. ஏன் இந்த கொலை வெறி?
.........)))))))))))ha ha...

இங்கே ஊரிலே பாருங்கள்
முகம் பாராத எத்தனையோ சகோதரர்கள்
தினமும் காலையில் அல்லது மாலை நேரங்களில்
குறுஞ்செய்திகள் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்..

இன்னும் சொல்லப்போனால் எனது நண்பர் ஒருவர்
பொதிகை தொலைக்காட்சி பார்த்து விட்டு
அதற்கு கடிதம் எழுதுவார்.
அவர் வாழ்வது வெளி நாட்டில்?

நாம் அந்த வேலைகளை செய்யா விட்டாலும்
அது போன்று செய்பவர்களை
நக்கலும், நையான்டியும் செய்யாமல் இருப்போமே?!