ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

முத்தங்கள் மலிவது ஏன்?!

'ரத்தினமே முத்தம் வைக்கவா
அதற்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா?!'
என்று நமது நாட்டு பண்பாட்டுடன் இனைந்து பாடிய காலங்கள் போய்,
இன்று என்னடாவென்றால் , முத்தங்கள் கொஞ்சம் கூட பயமில்லாமல்,
வெட்கமும் இல்லாமல், பல இடங்களில் சர்வ சாதாரனமாக, பரிமாற படுகிறது.

சமீபத்தில் எய்ட்ஸ் சம்பந்தமாக தில்லியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்ட ஷில்பாஷெட்டிக்கு, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கிரே, முத்தம் கொடுக்க தொடங்கி,
பல பேர் மத்தியில், ஆயிர கணக்கான பார்வையாளர்கள் முன்னிலையில்,
தொடர்ந்து கட்டி அனைத்து, தொடர்ச்சியாக முத்தங்கள் கொடுத்து,
அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அதேபோல சமீபத்தில் கேரள மாநிலம்
எர்னாகுளத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில்
வெளி நாட்டு விருந்தினர் எர்னா மாவட்ட ஆட்சியர் பீனாவுக்கு
கொடுத்த முத்தங்கள் ஊடகங்களில் சர்ச்சையானது?!
இது போன்ற முத்தங்கள் இந்திய பெண்களின் மீது
வெளி நாட்டினருக்கு உள்ள மோகமா?
இல்லை இது பெருமையாக நினைத்து செய்கிறார்களா
எனத்தெரியவில்லை.. இது இப்படி இருக்க,




நமது இந்திய மக்களிடமும்
அன்பையும்,பாசத்தையும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம்
கொஞ்சம் கொஞ்சமாக பரஸ்பரமாக மாறிவருகிறது.
அதாவது விலாவாரியாக சொல்லவேன்டுமானால்
இப்போது முத்தங்கள் பரிமாறுதலில் வந்து நிற்கிறது. அட தேவுடா..?!

அதாவது பல நாட்கள் கானாத அவர்கள் தேட்டத்தை
கட்டித்தழுவி முத்தத்தில் முடியும் பாசமாக கான்கிறோம்.
இது மட்டுமல்ல..
இன்றும் தொலைபேசியில் உரையாடும் நட்புகளிடமும்,
அதேபோல செல்லிடைபேசியில் உறவாடும் பலரிடமும்
உறவாடலை முடிக்கும்போது
முத்தங்கள் பரிமாறுவது சகஜமாக பழக்கமாக இருக்கிறது.

அதேபோல ஒன்றாக படிக்கும் நட்புவட்டங்களிடமும்
அவர்கள் பிரியும்போதும்,
அதேபோல அலுவல் நிமித்தமாக பணிக்கு செல்லும் யுவதிகள்,
சுக துக்கங்களில் பங்குகொள்ளும் யுவதிகளிடமும்
ஒருவரை விட்டு ஒருவர் பிரியும் போது
ஆறுதலாக முத்தங்கள் பகிர்வது இன்று வழக்கமாக உள்ளது.
பலருக்கும் இதுபோன்ற செய்திகள்
வியப்பாக இருக்கலாம்.


இது என்ன இந்திய பண்பாடா?
இல்லை இந்திய பாரம்பர்யமா?
இல்லை தமிழக கலாச்சாராமா?

தமிழக கவி எழுதிய பாடலை பாருங்கள்
தலைவன் தலைவியிடம் முத்தம் கேட்க
எப்படி வினவுகிறான் என?
'ரத்தினமே முத்தம் வைக்கவா
அதற்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா?!'
அதற்கு அவள் சொல்லும் பதில்
வெட்கத்தையும் ஒத்தி வைக்கவா
அதற்காக மந்தியிலே பந்தி வைக்கவா?!!!'

நமது பண்பாடும் கலாச்சாரமும், அன்னிய நாட்டு கலாச்சாரத்துக்கு அடிமை பட்டு,
இல்லை ஆசைப்பட்டு, இந்திய பாரம்பர்யமே தொலைந்து விடுமோ?
என்ற அச்சம் இதை படிக்கும் நம்மில்
பலருக்கும் வந்தாலும் ஆச்சர்யமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக