வியாழன், 5 பிப்ரவரி, 2009

சீமையன் சீமையன் தான்

தமிழக வரலாற்றில் பல்வேறு காலங்களில் தடம் பதித்தவர்கள் பலர்.
அந்த வகையில் தமிழகத்தில் அமர்ந்த ஆங்கிலேய பிரபுக்கள்
அவர்களின் தலைமயிடமாக நீலகிரி மாவட்டத்தின்
கோத்தகிரியை வைத்து செயல்பட்டு வந்தார்கள்..
கோத்தகிரி இப்போதும் இதமான தட்ப வெப்பத்துடன் உள்ள கோடைவாழிடமாகும்.
அவர்கள் வந்து செல்ல வித்யாசமான பயனமாக அமைய
இரயில் வழி பாதையை அமைக்க முயற்சி செய்தார்கள்.
இது ஒரு சாதாரனமான முயற்சி என்று யாரும் சொல்லமுடியாது. ஏனென்றால்,
கடல் மட்டத்திலிருந்து 7228அடி உயரம். வாவ்..
இது போன்ற வேலைகள் செய்வதில் சீமைத்துரைகளுக்கு அலாதி ப்ரியம். முயன்றார்கள்..வென்றார்கள்..இது அவர்களின் வாழ் நாள் சாதனை.



1845ம் வருடம் இதற்கான வேலைகள் தொடங்கினார்கள்.
அது பூர்த்தியாகி இரயில் மலை ஏற தொடங்கியது..1899.
மேட்டுபாளையத்திலிருந்து தொடங்கி கல்லார், அட்டர்லி, ஹில்குராவ்,ரன்னிமேடு,
காட்டேறி ரோடு, குன்னூர்,வெல்லிங்டன்,அரவங்காடு,கேத்தி,லவ்டேல் வழியாக,
ஊட்டியை வந்தடையும்..வாவ்..த்ரில்லிங்கான அதே சமயம்
என்ன ஒரு உற்சாகமான பயணம்.. அற்புதம்..அற்புதம்...
இது மொத்தம் 46 கி.மீ. 208குகைகள்,16 சுரங்கபாதைகள், 250 பாலங்களை கடந்து,
இந்த பயணம் தொடர்கிறது. வாவ்.... இதற்கான இரயில் ஆரம்பத்தில்
ஸ்விஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது.




2005ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பாரம்பர்ய சின்னமாக இதை அறிவித்து, இதை அமைத்த ஆங்கிலேயர்களுக்கு இது உலகின் மிக உயர்ந்த
கெளவரவ பட்டமாக கருதலாம். அவர்களின் திறமைக்கும் உழைப்புக்கும்
கிடைத்த மரியாதை என்று கூட சொல்லலாம். 1999ம் ஆண்டு இரயில்வே அமைச்சராக இருந்த நிதீஷ்குமார் இதை பாதுக்காக்க..4 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
ம்ம்.. என்ன சிந்தனை நமது வாழ் நாளில் நாமும் குடும்த்துடன் அல்லது
நண்பர்களுடன் சுற்றுலா சென்றால், கண்டிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து
ஊட்டி செல்லலாம். அப்படி போக முடியாதவர்கள் குன்னூரில் இருந்து ஊட்டி சென்று வாருங்கள். மலை வாசஸ்தலங்களில் வித்யாசமான அனுபவம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக