ஞாயிறு, 11 ஜனவரி, 2009

பயணக்கட்டுரைகள்

சலாலாஹ்
இது மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமானில் உள்ளது.
நமது பாலைவன நகரங்கள் போல இல்லாமல், இது முற்றிலும் மாறுபட்டு
பசுமை போர்த்திய மலைகளுடன் இயற்கை எழில் கொஞ்ச,
தென்னையும்- வாழையும், இன்னும் பல கனிவர்க்கங்களும் பூத்து குலுங்க
அழகிய வனாந்தரமாக காட்சியளிக்கும் இந்த புனிதபூமியை பார்த்தவர்களால்
எளிதில் மறக்க முடியாது. என்ன புனித பூமியா இதானே உங்கள் கேள்வி?
ஆமாங்க இது புனித பூமி தான். நாம் நினைப்பது போல இது சுற்றுலா ஸ்தலம்
மட்டும் இல்லை. இஸ்லாமிய வரலாற்றில் வரும் பலரும் வந்த இடம்.
இது இன்றைய சலாலாஹ் நகர் இல்லை. பண்டைக்கால முதல் இந்த நகர் உலகில் சிறப்ப்புற்று இருக்கிறது. இது என்னோட கருத்து என நினைக்காதீர்கள் இதற்கான சான்றுகளை ஒன்றன் பின் ஒன்றாக சொல்கிறேன். பண்டைய சேர நாட்டில் ஆட்சி செய்த
சேரமான் பெருமாள் என்ற மண்ணர் ஒரு முறை இரவு நேரத்தில் வெளிய உலாவி கொண்டிருக்கையில் ஒரு அற்புதமான காட்சியை காண்கிறார். என்ன வென்றால்,







நிலவு இரன்டாக பிளந்து மீன்டும் மூடும் காட்சி. இதை பார்த்ததும் அவருக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. அப்போதே இது சம்பந்தமான விசாரனையை தொடங்குகிறார். அதன் விபரம் அவருக்கு தெரிவிக்கின்றனர். அதாவது, அரபு தேசத்தில் முஹம்மது(ஸல்) என ஒருவர் இருக்கிறார். அவர் இறைவனின் தூதராம். அவர் தான் இந்த அற்புதத்தை செய்து இருக்கிறார் என சொல்ல, அவர் சேர தேசத்தில் இருந்து புறப்பட்டு பெருமானாரை சந்தித்து, அவரு இஸ்லாத்தை தழுவியதாக கேள்விபட்டு இருக்கிறோம். அவரின் அடக்கஸ்தலம் இருப்பது சலாலாஹ்வில் தான். அப்போ கிட்டத்தட்ட 1500வருடங்களுக்கு முந்திய நகரம். இரன்டாவதாக இங்கு நபி இம்ரான் அடக்கஸ்தலம் இருக்கிறது. நபி இம்ரான் யார் தெரியுமா? மர்யம் (அலை) அவர்களின் தகப்பனார். ஈஸா நபியின் பாட்டனார்.
கிறிஸ்தவர்கள் சொல்வதை போல சொன்னால், இயேசு நாதரின் பாட்டனார்.
அப்போ இது எந்த காலத்து நகரம். அதே போல இங்கு அயூப் நபியின் அடக்கஸ்தலமும் இருக்கிறது. அயுப் நபியா ஆச்சர்யம் வேன்டாம். உண்மை தான்.
அப்போ இது எந்த காலத்து நகரம் என .. யோசிக்க வேன்டியது தான்.


அதே போல இங்கே அல் பலீத் என ஒரு நகர் உள்ளது,
இந்த நகர் தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பில் உள்ளது.
இங்கே பார்வையாளர்கள் அனுமதி உள்ளது. இந்த நகர் அதாவது 4ம் நூற்றான்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை மக்கள் வாழ்ந்ததாக செப்பேடுகள் சொல்கிறது.
இப்போது சலாலாஹ்வை பார்ப்போம். நாம் துபாயில் இருந்து தரை மார்க்கமாக
ஹட்டா வழியாக சென்று அங்கிருந்து மஸ்கட் சாலையை பிடித்து..
செல்லும்போது நிஸ்வா- சலாலாஹ் சாலை தனியாக பிரியும்.
அதன் பின்னர் நேராக ஒரே சாலை தான்.
ஹட்டா- நிஸ்வா- சலாலாஹ் - ஆதம்- தும்ரியத்- சலாலாஹ்.
கிட்டத்தட்ட 15மணி நேரம் பயணம். அதாவது சராசரி வேகத்தில் செல்வோமானால், இன்னும் சிலர் வேகமாக கூட செல்வதுன்டு. விசா இங்கேயே வாங்கி செல்வது நல்லது. அதே போல போகும் வழியில் அடிக்கடி கடைகளோ, பெட்ரோலோ கிடைப்பதில்லை.
சர்வ சாதாரனமாக 150 கி.மீ. அல்லது 200 கி,மீ தான்.
அதனால் கிடைக்கும் போது நமக்கும் வண்டிக்கும் தீனி போடுவது நல்லது.



அதே போல சாலையின் இருபக்கமும் பாலைவனம் தான்.
எங்கு பார்த்தாலும் சுடுமணல் தான். (காடு பொட்டல் காடு...)
ஆகையால், நாம் இங்கே பார்ப்பது போல எங்கேயும் மக்களை பார்க்கமுடியாது.
அதே போல கடும் வேகமாக மணல்காற்று அங்கு வீசுவதன்டு.(sand dunes) எனவே, வாகனத்தில் செல்லும் போது அதை அனுசரித்து செல்வது நல்லது.
சலாலாஹ்விற்கு செல்ல சற்று தைரியமும் வேன்டுமென்றால் மிகையல்ல.
சரி இனி சலாலாஹ்வை பார்ப்போம். இவ்வளவு நேரம் அலுத்து நாம் பயணம் செய்த பலன் சலாலாஹ் நெருங்க 30 கி.மீ இருக்கும் போது, அதன் மாற்றம் தெரிகிறது. வெறும் மலைகளில் பசுமை, ஊட்டி மலை ஏறும்போது உள்ளது போல வழியோர காட்சிகள் பருவனிலைகளில் மாற்றம், வாவ்வ்வ்வ் சற்றே நாம் உஷாராகி கண்கள் குளிர்ச்சியுடன்


நகரில் பயனிக்க அழகான மலையில் இருந்து இறங்கி சாலைகளில் அழகு மற்றும் பூத்துக்குலுங்கும் பூக்களுடன் நமது மனதில் சந்தோசத்துடன் .. முதலில் நமது இடதுபுறம் வரவேற்பது லூலு..ஹா..ஹா.. அங்கேயும் LuLu Hypermarket இருக்கு.
அதன் சிக்னலில் இருந்து வலது பக்கம் போனால் 23rd july street.
இங்கே தான் நாம் தங்கனும். நாம் தங்குவதற்கு இங்கே லாட்ஜ் கிடையாது.
எங்கே போனாலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் fully furnished flats.
ஒரு நாள் தங்குவதற்கு அதிகமில்லை 15 அல்லது 20 ரியால். oman riyals.
நல்ல வசதியாக டபுள் பெட்ரூம் + ஹால். எல்லா வசதிகளுடன்.
சலாலாஹ்வில் ஜாஸ்தி ஜனக்கூட்டம் இல்லை அதிக நெரிசல்கள் இல்லை.

பல உணவகங்களும் இரவு நேர வியாபாரம் மட்டும்.
சாலைகள் நேர்த்தியாக இருக்கிறது. சாலைகளில் எங்கும் U TURN கிடையாது.
எங்கும் அமைதி எங்கும் நிசப்தம் அந்த மக்களிடம் நமது வாழ்க்கை போல
ஒரு பரபரப்பான வாழ்க்கையை பார்க்க முடியவில்லை. சுகூன்...... சுகூன்.....
எதிலும் அவர்களிடம் ஒரு நிதானம். பொறுமைக்கு உதாரனமாக நம்ம பெண்கள்
அயூப் நபியை சொல்வார்கள். அந்த பொறுமையை அவர்களிடம் நாம் உணரமுடிகிறது.




ஒரு வேளை அவர்கள் வாழ்ந்த பூமி என்பதால் என்னவோ?!!
சலாலாஹ்வில் ஜூலை ஆகஸ்ட் மாதம் அரபு நாட்டு வெயில் இல்லை.
கூடுதலாக சொல்ல வேன்டுமானால் 24 , 25 டிகிரி தான்.
அடிக்கடி மழை பெய்வதுன்டு. ஒரு வீதி வழியே இந்தக்கடைசியில் இருந்து
அந்தக்கடைசி வழியே கேரளாவை நினைவு படுத்துவது போல
இளனீர் மட்டும் வாழை பழங்கள் விற்கும் கடைகள். அதே போல அந்த பகுதி
கடற்கரையை பார்த்தால் ஏதோ கோவாளம் கடற்கரைக்கு போனது மாதிரி இருக்கிறது. காரனம், கடற்கரையை தென்னந்தோப்புகள் சூழ்ந்துள்ளது. சாலையின் இருபக்கமும்
வாழை தோப்புகள் அதன் இடையிடையே வீடுகள்... வீதிகள் நம்ம தமிழகத்தில் இருப்பது போல நினைவு, பார்க்க வேன்டிய இடங்கள் அங்கெ சென்றாலே நமக்கு கிடைத்து விடும். சில நீரூற்றுகளும் இருக்கு. அழகிய பூங்காங்கள், கடற்கரைகள், விலைவாசி ஜாஸ்தி இல்லை. அங்கே தமிழ் உண்வு வேன்டுமா? இருக்கவே இருக்கு அன்னபூர்னா. இது இருப்பது (al safsaf restaurant local name) இது இல்லாமல் வேறு ஒரு உடுப்பி உணவகமும் இருக்கு. இங்கேயும் நம்ம தோசை, இட்லி என எல்லாம் கிடைக்கும். இன்னும் கூடுதலாக.. நேரம் கிடைக்கும் போது சொல்லலாம். சலாலாஹ்வை விட்டு வெளியே நாம் வர
நமது மனம் மட்டும் அந்த நகரில் உலாவர....

3 கருத்துகள்:

  1. Hello
    a small mark at the time of my passage on your very beautiful blog!
    congratulations!
    thanks for making us share your moments
    you have a translation of my English space!
    Happy New Year to you and your family
    cordially from France
    ¸..· ´¨¨)) -:¦:-
    ¸.·´ .·´¨¨))
    ((¸¸.·´ ..·´ -:¦:-
    -:¦:- ((¸¸.·´* ~ Chris ~ -:¦:-
    http://SweetMelody.bloguez.com

    பதிலளிநீக்கு
  2. very very thanks
    4 ur visit
    i will try to english translation
    not now later...
    nice...

    பதிலளிநீக்கு