திங்கள், 7 டிசம்பர், 2009

அவஸ்தைகள் பலவிதம்

தமிழகத்தில் நடைபெறும் அன்றாட
குடும்ப சூழல் ஒரு பார்வை.

அன்றைய காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும்
குறைந்தது 5,6, பிள்ளைகள், பாட்டிகள், பெரியவர்கள்,
அடிக்கடி பார்க்கவும், குசலம் விசாரிக்கவும் உறவுகள்..
எத்தனை எத்தனை ஆனந்தம்..
அட்டகாசமான நினைவுகள்..

அன்றைய காலங்களில் மருமகள்களாக வந்த பெண்களும்
தனது மாமியார் வீட்டின் கெளரவத்தை தூக்கி தலை நிமித்தினார்கள் என்றால் மிகையல்ல.
அன்றைய மருமகள்கள் தனது நாத்தனார்களுக்கு கொடுத்த மரியாதை,
நாத்தனாரிடம் நயந்து கொண்டது,
அதேபோல சின்னமாமியார்களுக்கு மரியாதை
அவர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை கொண்டாடும் விதம் அற்புதம்...அற்புதம்...

அன்றைய பெண்களின் மன நிலை எப்படி இருந்தது என்றால்,
புகுந்த விட்டுக்கு சென்றால் அங்கே உள்ள நல்லது கெட்டது
சுக துக்க நிகழ்சிகளில் பங்கு கொண்டு, நல்லவை கெட்டவை அனைத்தையும்
தனது தோளில் சுமந்து, தனது கணவன் வலதா, இடதா என தடுமாறும்போது,
அவனுக்கு சரியான திசையை சொல்லி,
அந்த குடும்பத்தை சீர்தூக்கி,
இன்னார் வீட்டு பெண் இந்த வீட்டில்
இப்படி வந்து வாழ்கிறது
என பலரிடமும் பெயர் பெற்ற
மருமகள்கள் இருக்கிறார்கள்.
அதேபோல மாமியார் மெச்சும் மருமகளும்
இந்த தமிழகத்தில் இல்லாமல் இல்லை.
கணவன் மனைவியின் அற்புதமான உறவை
அவர்களின் நடைமுறையை கூட
கண்ணதாசன் ஆபாசம் இல்லாமல்
அழகாக ஒரு பாடலில் வர்னித்து இருப்பார்.
எப்படி என பாருங்கள்...

'காலளந்த நடையினிலே
காதலையும் தான் அளந்தாள்
காலமகள் பெற்ற மயில்
இரவினிலே தான் மலர்வாள்'

என்ன ஒரு அழகான குடும்ப நடை
கணவன் மனைவி உறவை அழகாக சொல்கிறார்.

இன்றைய காலங்களில் இதுபோல
நடைமுறை தமிழகத்தில் ஒரு சில
குடும்பங்களில் தான் பார்க்கலாம்.
பெரும்பாலும் மருமகள்கள் மாமியார் வீட்டில் குடும்பம் நடத்த செல்வதில்லை.
சில மருமகள்கள் சுக, துக்க நாட்களில்
மட்டும் சும்மா ஒரு விசிட்.
இன்னும் சில மருமகள்களுக்கு
அந்த பக்கமே அலர்ஜி.
இன்னும் சிலர் அட்டகாசம்
நாற்பது நாட்கள் மாமியார் வீட்டில்
குடும்பம் நடத்தியதில்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவர் அலைபேசியில் அழைக்க
என்ன என வினவினேன்.. ஒரு முக்கியமான சேதி பேசவேண்டும்.
நேரில் வந்து பேசனும் ..
என்ன என வினவினேன்..
அவர் சொன்ன சேதி இதான்
மனைவியின் விவகாரம்
மாமியார் வீட்டுக்கு செல்வதில்லை.
இதை கணவர் சொன்னாலும் அவனை மதிப்பதில்லை.
இதை சொல்கிறான் என்பதால் அவன் போன் செய்தாலும் போனை எடுப்பதில்லை..
அட என இதற்கே ஆச்சர்யபட்டால் எப்படி?
இன்னோரு சம்பவம் பாருங்கள்
நான்கு, ஐந்து, ஆண்பிள்ளைகள் உள்ள ஒரு பெரியவீடு
ஆனால், அந்த வீட்டில் எந்த மருமகளும் இல்லை.
இதைவிட ஒரு உண்மை என்னவென்றால்,
அந்த பெண்களுக்கு அறிவுரை சொல்லாமல்
முழு சுதந்திரமும் கொடுப்பது யார்
தெரியுமா?! அந்த பெண்களின் தாய்மார்கள் தான்.
என்னமோ போங்க?!
இந்த விசயத்தை பொறுத்த வரை
பொறுப்பு யாருக்கு வரவேன்டும் என்பது
மருமகளுக்கு மட்டுமல்ல
அந்த பெண்களின் தாய்மார்களுக்கு தான்.
தனது பெண் இன்னார் வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து
பெயரெடுத்து அதைப்பார்த்து உள்ளம் பூரிக்கவேண்டும்..
இல்லயேல் அதுவரை
மீனாட்சி ஆட்சி தான்...
அப்போ??
திருப்பாச்சி
துருப்பிடிச்சிப்போய்டும்...)))))j/k

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக