வியாழன், 29 ஜனவரி, 2009

நமது குடியரசு சிந்தனைகள்

நமது நாட்டின் குடியரசுதினம்
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும்
நாமும் அந்த சந்தோசத்தை அடைகிறோம்
என்பதில் ஐயமில்லை.
நமது நாட்டைப்பற்றி சொல்வார்கள்
இந்தியா ஏழ்மையான நாடு
ஆனால் வாழ்வதெல்லாம் பணக்காரர்கள் தான்.
இது சரியான வார்த்தை தான்.
நாம் சென்னை, ஹைதை, மும்பை, தில்லி, பெங்களூரு, போன்ற
பெரு நகரங்களையும் அங்கே வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் பார்த்தால் தெரியும்.
ஆசியாவின் டெட்ராய்ட் என பெயர் வாங்கியது
நம்ம சென்னை தானே..
இது மட்டுமல்ல..
நமது ஊரிலே பாருங்கள்
எத்தனை செல்லிடைபேசிகளின் கோபுரங்கள்
தகவல் தொடர்பு வசதிக்காக..




இன்னும் நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு
என்ன என்னமோ சொல்லலாம்.
ஆனாலும், முதல்வன் அர்ஜூன் சொல்வது போல
'இன்னும் காலில் செருப்பு இல்லாமலும்
மூன்று வேளை வயிறு நிறைய சாப்பிடாமலும்,
வேளை இல்லா திண்டாட்டமும்,
முதிர் கண்ணிகளும், சமூக கொடுமைகளும்,
குடும்ப சூழ் நிலைகளால் பாதிப்புக்கு ஆட்பட்டு
தனது உடலையே தானமாக்கி
'விருந்து சமைக்கும் விறகுகள்' வரை நமது சமூகத்தில் இருக்கிறார்கள்
என்பதை நாம் மறுக்கமுடியாது.





தொழில் துறைகளிலும் அனைத்து வசதிகளிலும் நமது இந்தியா சிறப்பு பெற்று வருகிறது.
ஆனால், நமது தாய் நாடான இந்தியாவிற்கு நாம் என்ன செய்கிறோம்?!.

இதற்காக பெரிய தொழில்துறைகள் தொடங்க
இப்படி கணவு எல்லாம் வேன்டாம்..
நமது இந்திய உற்பத்தி பொருட்களை நாம் வாங்கவேன்டும்.
அவைகளை பயன்படுத்த நாம் பழகி கொள்ளவேன்டும்.
உதாரனமாக, நாம் உபயோகிக்கும் குளியல் சோப், பற்பசை, இதில் இருந்து தொடங்கி சிறுக.. சிறுக.. இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவலாம்.
அதிகமான மக்கள் வேலைக்கு அமைந்துள்ள துறை இந்தியாவில் இரன்டு தான்.
ஒன்று அஞ்சலகம்.
இரன்டாவது இந்திய இரயில்வே..





நாம் ஊருக்கு செல்லும் காலங்களில்
இவைகளை பயன்படுத்த முயற்சிக்கவேன்டும்.
அதேபோல நமது பயணங்களில்
புகைவண்டியில் கூட சேரலாம்.
பேருந்துகள் மாதிரி அதிக நெருக்கம் இல்லை.
பயணத்தின் இடையே தேனீர், காபி,
படிப்பதற்கு அன்றைய செய்திதாள்கள்,
கழிவறை வசதி...குடும்பத்தோடு பிரயாணம் செய்ய நல்ல வசதி..




அதேபோல, அஞ்சலங்களில் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றது,
அதே போல அஞ்சலக அடையாள அட்டை,
சமீபத்தில் கூட தங்ககாசுகள் விற்பனை அறிமுகபடுத்தினார்கள்.
இன்னும் என்ன என்னமோ சொல்லலாம்.



நாம பரீட்சை எழுதும் போதே
பள்ளிக்கூட நாட்களில் சொல்லிவிட்டார்கள்
என்ன ஞாபகம் இருக்கா?! 'சுருக்குக' என..
அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேனி வளர்ந்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே?!'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக