வியாழன், 22 ஜனவரி, 2009

நட்பு வட்டங்கள்

முஸ்தபா..முஸ்தபா..டோன்ட் ஒர்ரீ முஸ்தபா... என்ற பாடல்
தமிழகத்தில் மட்டுமல்ல உலகில் தமிழர்கள் வாழும் மூலைமுடுக்கெல்லாம் ஒலித்தது,
இந்த பாடல் சொன்னது என்ன? மூழ்காத ஷிப்பே பிரட்ஸ்ஷிப் தான் என...
ஆனால், இன்று உள்ள காலகட்டங்களில் அப்படி பாடமுடியுமா என்றால் ?
சற்றே நமக்கு ஏற்படுவது சங்கோஜம் தான். நட்புகள் நம்மிடம் உள்ளது பலவகை.
ஒரு தெருவில் கட்டிப்புரன்ட புழுதி தோழர்கள்,
பள்ளியில் ஒரு சேர படித்த நண்பர்கள்,
கல்லூரி சாலையில் பயனித்த நண்பர்கள்,
அலுவல் நிமித்தமாக சங்கமிக்கும் நண்பர்கள்,
இவையல்லாமல் இலக்கியம், சங்கங்கள், சுற்றுலா என மட்டுமல்லாமல்,
நமது வாழ்வில் உயர கை கொடுக்கும் உற்ற தோழர்கள் என,
நாம் மிகப்பெரிய பட்டியலே போடலாம். ஆனால், இவைகளில் தலையாய
நட்புவட்டம் யார்? நமது புழுதி தோழர்கள் தான்.




அன்றும் இன்றும் நமக்கு என்றும்
உன்னத நட்பு இவர்களிடம். ஆனால், இன்று இந்த நட்புகள் ஏன் எனத்தெரியவில்லை..
ஒரு சேர அமர்ந்து படித்து, ஒரு தட்டில் அமர்ந்து சாப்பிட்டு,
ஒரு கூட்டமாக சுற்றுலா சென்ற காலமெல்லாம் மறந்து,
இன்று வட்டத்திற்குள்ளே வந்தது என்ன தெரியுமா? என்னமோ ஈகோவாம்.
என்ன புன்னாக்கோ? எங்கேயோ போற மாரியாத்தா ஏன் மேலே வந்து
ஏறிட்டு போறாங்கிற மாதிரி,





அடிக்கடி உறவுகளில் விரிசல்கள்,
அதுவும் எப்படி? அவனுக்கு நாம எப்படி போன் அடிக்கிறது, அவன் அடிக்கட்டுமே..?
நட்பில் கூட கெளரவமா? அட தேவுடா? இதில் இன்னும் குறைகள் வேறு?
நம்ம பெண்களை போல நீ என்னிடம் சொல்லவில்லை ? நீ என்னிடம் கேட்கவில்லை என? அட நட்பின் மறுபக்கம் பாருங்கள் ஒரு பொட்டலம் கடலை வாங்கி பிரித்து தின்றோம்.
நம்ம ஊரு பாலத்தடியில் கொட்டும் பனியிலும் அமர்ந்து பேசினோம்.
ஒரு சேர குளிக்க சென்று ஒரு குழுவினராக சைக்கிளில் உலா வந்து,
ஒன்றாக ஊரிலே அடிக்கிற வெயிலை எல்லாம் தலையிலே வாங்கி,
ஒன்னுக்கும் உதவாத உதவாக்கரைகள் என திட்டு வாங்கியது எல்லாம் மறந்துட்டோமா?




இன்னைக்கு நமக்கு என்ன? வந்துச்சி? கல்யாணம் தானே பண்ணியிருக்கோம்.
பூ முடிச்சி, பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, அதானே...,
இல்லை கவிதை நடையில் சொன்னால்,
சின்ன நெற்றியில் சந்தனமிட்டுக்கொண்டு
பின்னலிடாத ஈரக்கூந்தலோடு..
பட்டு சரசரக்க..
நாம் கூப்பிடும் போதெல்லாம் அலங்கமலங்க.. பதறிய படி ஒரு பூச்சரம்..
அது இருக்கட்டுமே... யாரு வேண்டாம்னு சொன்னது?
நமக்கு நட்பும் வேனும்னு தான் சொல்றோம்.
இந்த ஊரிலே வேலைதான் முக்கியம் நேரம் கிடைப்பது அரிது தான் பிரச்சனையில்லை நேரம் கிடைக்கும் போது ஒரு போன் ஹாய் நல்லா இருக்கியா?
வாரம் ஒரு முறை இல்லை மாதத்தில் ஏதாவது ஒரு முறை நட்பை வளர்க்கலாமா?



இறைவன் நமக்கு கொடுத்த வரம் என்னங்க? நல்ல நட்புகள்..
அது என்றும் நல்ல உறவுகளாக நம்மிடம் இருக்கனும்..
நட்பு என்றால் சாதாரனம் அல்லங்க.. அது ஸ்னேகிதம்
அதுவும் எப்படி வெல்லம் போட்ட ஸ்னேகிதம்..
எங்கே ஒரு சந்தோசமாக நட்பு வட்டத்திற்கு போன் அடிங்க...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக