வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பான அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஒரு வருடம் ஆகிவிட்டது.
என்னமோ இப்போ வந்து வலைப்பதிவு எழுத வந்தமாதிரி இருக்கு.
ஒரு வருடம் போனது தெரியலை..

இனையங்களுக்காக கட்டுரைகள் எழுதுவது வழக்கம்.
அதுபோல நான் எழுதிய கட்டுரை ஒன்றை
எனது நண்பர் சேர நாட்டில் வாழும் 'வசந்த்'
அவர்களுக்கு அனுப்ப அவர் படித்து விட்டு,
இதை நீங்கள் வலைப்பதிவில் எழுதினால்
அனைவரும் படித்து பயன் பெறுவார்களே எனக்கூற..
சரி முயற்சி பண்ணலாம் என
தொடங்கப்பட்டது தான் இந்த வலைப்பதிவு.
'எனது வாழ்க்கைப் பயணங்களில்'
சோழ தேசத்தின் மண்வாசனையுடன், பண்பாட்டுடன்,
இந்த வலைப்பதிவில் எழுதி வருகிறேன்.

எனது நட்பு வட்டங்கள் மட்டுமல்லாது
எனது முகம் தெரியாத எத்தனையோ பேர்
எடுத்து படித்து வருகிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இதுவரை 40 நாடுகளில் இருந்து வந்து இருக்கிறீர்கள்.
சரி ஒரு வருடம் ஆகிவிட்டது.
வலைப்பதிவை அழகு படுத்துவோம் என அழகுபடுத்தி
இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறேன்.
இனி வரும் காலங்கள்
இனிதே செல்ல
எல்லாம் வல்ல இறைவனிடம்
பிரார்த்தித்த வண்ணம்
நமது எழுத்து பயணத்தை தொடருவோம்.
என்றும் அன்புடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக