திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதலர் தினம்

அவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை
அவளுக்கு யாரும் இனை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

உலகமே கலாச்சார சீரழிவில் சென்று கொண்டிருக்க
வெட்கம் அறியாத ஒரு தலைமுறை உருவாக
ஊடகங்கள் அதுக்கு வழி வகுக்கிறது என்றால் மிகையல்ல.

காதலர் தினம் என அதற்கு என சிறப்பு நிகழ்ச்சிகள்
அதற்கென சிறப்பு நேர்கானல்கள்
ஏன் இந்த நமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத கொண்டாட்டங்கள்.

ரோசாப்பூவும், வாழ்த்து அட்டைகளும்,
நினைவில் நிற்க அன்பளிப்புகளும்
பரிமாறுதலில் இருந்தாலும்,
இன்னும் அறுவடைக்கு தயாராக இருக்கும்
தஞ்சை தரணியின் வயல்வெளிகளில்
கானும் நெற்கதிர்கள் நாணத்துடன் தலை சாய நிற்பது போல,

இன்னும் அச்சம் , நாணத்துடன்
அடக்கமாக வாழும் தமிழ் குடும்பங்களும்
அது செழித்தோங்க பண்பாடுகள் சிதையாமல் இருக்க
கல்லாமல் வரும் ஆச்சாராமான கலாச்சாரத்துடன் வாழும் மக்கள்
இந்த மண்வெளியில் உலவாமல் இல்லை.

சோசியல் நெட்வொர்க் எனும் பேஸ்புக்கில் கூட
தன் முகம் காட்டாத நாணத்துடன் வாழும்
தமிழ் சமுதாயம் இருக்கிறது என்றால் மிகையல்ல.
உலகம் கலாச்சார சீரழிவில் நாகரீக மோகத்தில் சென்றாலும்
விழிப்புணர்வு என்னும் பிரச்சாரத்தை நாம் செய்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக